Friday, April 17, 2009

ரீத்தீஷ் Vs சாம் ஆண்டர்சன்

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், தனஷ்-சிம்பு என்று ஒரு பட்டியல் இருக்கிறது! அந்த வரிசையில் ரீத்தீஷ்-சாம் ஆண்டர்சன் வந்துள்ளனர். ஜே கே ரித்தீஷுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், இவருக்கு ஆண் ரசிகர்கள் தான் அதிகம்! யார் ஒருத்தருக்கு பெண் ரசிகர்கள் இருக்கிறதோ அவருக்கு தான் மவுசு அதிகம், நம்ம சூர்யா, மாதவன பாருங்க அந்த மாதிரி. ஜே கே ரீத்திஷ் கலக்கிகொண்டிருக்கிறார் என்று ஒரு புரம் இருக்க, அவரை வீழ்த்த வந்துவிட்டார் சாம் ஆண்டர்சன். நடிப்பிலும் சரி, ஆடல் காட்சிகளிலும் சரி, உணர்ச்சிபூர்வமான காட்சிகளிலும் சரி மனதைவிட்டு நீங்கா இடத்தில் stool போட்டு உட்கார்ந்து இருக்கிறார்.

ஹீரோயினிடம் அவர் இயல்பாய் பேசியதை பார்த்து நான்கு நாட்கள் தூக்கம் இல்லாமல் தவித்த பெண் ரசிகர்கள் ஏராளம். அந்த வீடியோவை பாருங்க....



ஹீரோயின் நம்மைவிட அரை அடி உயரம் என்றபோதிலும், தனது வசீகர பார்வையால் ஹீரோயின் மனதில் நமது செருப்புகளிலும் இடம் பிடித்துவிடுகிறார் இந்த கருப்பு மாதவன்! ஹீரோயினிடம் தண்ணி அடிச்சுட்டு பாட சொல்வது தமிழ் சினிமாவின் இன்னொரு புதுமை!

ஆங்கில புலமை கொண்ட விஜய்காந்துக்கே மிரட்டல் விடும் அளவுக்கு எங்கள் மார்டன் சூர்யா ஆங்கிலம் பேசுவது அருமையிலும் அருமை! மஞ்ச காட்டு மைநா என்று பெண்களை பார்த்து பாடும் காலம் மலை ஏறிபோச்சு. வந்துவிட்டார் எங்கள் மஞ்ச காட்டு நைனா!



ஒவ்வொரு படத்தின் ப்ளஸ் அதன் கிளைமெக்ஸ் காட்சியாக இருக்கவேண்டும். அப்படி நிறைய படங்கள் அமைவதில்லை. நாயகன், கன்னத்தில் முத்தமிட்டால், குட்டி, சேது போன்ற ஒருசில படங்களே கிளைமெக்ஸில் நம்மை உருக வைத்தது. அந்த வரிசையில் இப்படத்தின் கிளைமெக்ஸ் தாய்க்குலங்களின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. இந்த காட்சியை பார்த்த பிறகு, இவருக்கு நிறைய பெண் ரசிகர் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாமல், 60 அடி உயரத்தில் இவருக்கு ஒரு கட் அவுட், கண்ணம்மாபேட்டையில்!

நமது கலாச்சாரத்தில் புதுமையை புகுத்தி, கல்யாணம் முடிந்து காரை சுற்றி வருகிறார் இந்த பெண்களின் நாயகன்! நிச்சயம் நீங்கள் கண் கலங்குவீர்கள். ஆக, ஒரு கைகுட்டையை கையில் வைத்து கொள்ளுங்கள்.... இதுக்கு மேல என்னால எழுத முடியல... கண்ணு கலங்கிட்டு!! :(


அவரின் தீவிர ரசிகர்கள் அவருக்கு கொடுக்க போகும் பட்டம் "புரட்சி புறா"

Wednesday, March 25, 2009



துப்பாக்கி - அழகிகள் - நவீன கார் - மிடுக்கான ரீட் அண்டு டெய்லர் ஷூட் - வில்லன்கள் - ஆக்சன் - சேஸிங் - உலகத்தில் எது மாறினாலும் மாறுமே தவிர ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான இந்த விஷயங்கள் மாறவே மாறாது. என்ன தற்கால நவீன ஜேம்ஸ் பாண்ட் செல்போன் பயன்படுத்துகிறார்.

ஸ்டார் வார்ஸ் திரைப்பட தொடர்களுக்கு அடுத்ததாக உலகில் மிகப்பிரபலமான திரைத்தொடராக ஜேம்ஸ்பாண்டு 007 திரைப்படத் தொடர்களை குறிப்பிடலாம். இயான் பிளெமிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 1950களில் எழுதிய நாவல்கள் மற்றும் குறுநாவல்களே ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்களாக பரிணமித்திருக்கின்றன. 1962ல் தொடங்கிய ஜேம்ஸ்பாண்டின் திரைப்பட சகாப்தம் 2008 வரை 22 பிரம்மாண்ட படங்களாக வளர்ந்து நிற்கிறது.

வசூல் ரீதியாக பார்க்கப் போனால் இதுவரை வந்த 22 படங்கள் மூலமாக நான்கு பில்லியன்களுக்கு மேல் டாலர்களாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஹாரிபாட்டர் திரைப்பட வரிசை மட்டுமே இதைவிட அதிக வருவாயை ஈட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயான் ப்ளெமிங் எழுத ஆரம்பித்து ஜேம்ஸ்பாண்டு பிரபலமான பின்னர் 1954ல் தொலைக்காட்சி வடிவமாக கடைசியாக வெளிவந்த ஜேம்ஸ்பாண்டு படமான காசினோ ராயல் வெளியாகியது. அதன் பின்னர் ஜேம்ஸ் பாண்டை திரைக்கு கொண்டுவர பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மெனக்கெட்டு பல தடைகளால் தள்ளிப்போடப்பட்டது. 1962ஆம் ஆண்டு வெற்றிகரமாக முதல் ஜேம்ஸ்பாண்டு திரைப்படமான டாக்டர் நோ வெளியாகி வசூலை வாரி குவித்தது. அன்றிலிருந்து இன்றுவரை ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் கோடைவிடுமுறை நேரங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரத்தில் ஆறு பேர் நடித்திருக்கிறார்கள். சான்கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் க்ரேக் ஆகியோர் அவர்கள்.

ஒலிப்பதிவு மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ்க்கான அகாடமி விருதுகளை ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் பெற்றதுண்டு.

ஜேம்ஸ் பாண்டு படங்களுக்கென பல சிறப்பு அம்சங்கள் உண்டு.

ஜேம்ஸ் பாண்டு கலக்கல் ம்யூசிக்கில் ஸ்டைலாக நடந்துவந்து திரையை சுட்டதும் திரை முழுவதும் ரத்தமயமாகி டைட்டில் வரும். ஒரு சில படங்களில் மட்டும் இந்த பாரம்பரியம் மிஸ்ஸிங்.

கதாநாயகியை முத்தமிடுவது அல்லது காதல்செய்வது எல்லா ஜேம்ஸ் பாண்ட் படங்களின் கடைசி ரீலில் இடம்பெறும். ஆன் ஹெர் மெஜஸ்டி சர்வீஸ் மற்றும் காசினோ ராயல் படங்களின் இறுதியில் மட்டும் இந்த சம்பிரதாயம் இருக்காது. காரணம் இரண்டு படங்களிலும் ஜேம்ஸின் காதலி கடைசி காட்சியில் உயிரோடு இருக்கமாட்டார்.

ஜேம்ஸின் பாஸான மிஸ் எம்மின் செக்ரட்டரி மனிபென்னி ஜேம்ஸ்பாண்டை ஒரு தலையாக காதலிப்பது எல்லா படங்களிலும் வரும் காட்சி. ஜேம்ஸ் ஏனோ அவரது காதலை நிராகரித்தே வருவார். முதல் படமான டாக்டர் நோ மற்றும் கடைசியாக வெளிவந்த காசினோ ராயல் இருபடங்களிலும் மனிபென்னி கதாபாத்திரம் இல்லவே இல்லை. மற்ற அனைத்துப் படங்களிலும் அந்த கதாபாத்திரம் கண்டிப்பாக ஜேம்ஸை காதலிக்கும்.

ஒவ்வொரு படத்துக்கும் ஜேம்ஸ் பாண்டுக்கு க்யூ பிராஞ்ச் வினோத அழிவு ஆயுதங்கள் உருவாக்கித் தருவது வாடிக்கை. அவற்றை வைத்து தான் தலைவர் க்ளைமேக்ஸில் எதிரிகளை ஒற்றை ஆளாய் அழித்தொழிப்பார்.

இன்று தமிழ்படங்களில் உச்சரிக்கப்படும் பஞ்ச் டயலாக்குகளுக்கெல்லாம் ஜேம்ஸ் படங்கள் தான் முன்னோடி. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு ஸ்பெஷல் பஞ்ச் டயலாக் இருக்கும். தலைவரின் அறிமுகக் காட்சியிலேயே அனாயசமாக ஒரு சாகஸத்தை நிகழ்த்திவிட்டு ஒரு பஞ்ச் டயலாக் அடிப்பார். ஜேம்ஸ்பாண்டு திரைப்பட வரிசையில் இரண்டே இரண்டு படங்கள் மட்டும் இந்த சம்பிரதாயத்துக்கு விதிவிலக்கு.

ஜேம்ஸ்பாண்டு பார்களுக்கு சென்றால் வோட்கா மார்டினி விரும்பி குடிப்பார். பார் டெண்டரிடம் "Shaken, not stirred" என்றும் சொல்வார். கோல்டன் ஐ திரைப்படத்தில் இது கொஞ்சமாக மாற்றப்பட்டு "Shaken, but not stirred" ஆனது. காசினோ ராயல் திரைப்படத்தில் பார்டெண்டர் ஜேம்ஸ்பாண்டை பார்த்து "Shaken or stirred?" என்று கேட்பதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

ஜேம்ஸ் பாண்டு படங்கள் என்றாலே பெண்கள் வெகுபிரசித்தம். இவர் காப்பாற்றும் பெண்கள் இவரை காதலிப்பார்கள் அல்லது சக பெண் ஏஜெண்டுகள் இவரை காதலிப்பார்கள். அதுவும் இல்லையென்றால் வில்லனின் ஆசைநாயகிகளுக்கு ஜேம்ஸ் மீது காதல் வந்துவிடும். பெண்களே இல்லாமல் ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தை எடுப்பது நடக்காத காரியம்.

ஜேம்ஸ் பாண்டு படங்களில் அவருக்கு வழங்கப்படும் கார்கள் வெகுபிரசித்தம். நவீனவசதிகளோடு கூடிய அதிவேக கார்களை ஜேம்ஸ் பயன்படுத்துவார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கார்கள் பல மில்லியன் டாலர்களுக்கு ஏலத்துக்கு விடப்படும்.

எல்லா ஜேம்ஸ் படங்களிலும் அந்த படப் பெயர் ஒரு வசனத்திலாவது இடம் பெறும். உதாரணமாக சில....
Mr.Bond, You Only live Twice
You lived to Die Another Die.

மூவி டைட்டிலில் ஒரு பிரபலமான பாப் பாடகரின் பாடல் இடம் பெறும். அந்த பாடல் வரியிலும் பட பெயர் இடம் பெற்றிருக்கும். மடோனாவின் பாடல் Die Another Die படத்தை சிறப்பித்தது.

ஒரு சூதாட்ட காட்சியாவது 007 படங்களில் கண்டிப்பாக இடம் பெறும். அது என்ன ராசியோ தெரியவில்லை. பனி சறுக்கு காட்சிகளும் நிறைய படங்களில் வருவதுண்டு.

ஜேம்ஸாக நடிக்கும் நடிகர்களை எடுத்து கொண்டால், ஒருவரை விட்டு ஒருவர் தான் நிலையாக இருகின்றனர். கானரிக்கு பிறகு வந்த லெஸன்பி ஒரு படத்திலும், மூருக்கு பிறகு வந்த டிமோத்தி டால்டன் இரு படங்கள் மட்டுமே நடித்தனர். டானியல் கெரெக் தொடர்ந்து நிலைப்பாரா என்று பொறுத்து பார்ப்போம்

ஜேம்ஸின் உதவியாளராக, Money Penny என்று ஒரு பெண்மணி தோன்றுவார். பாண்டு தன் அலுவலகத்தில் நுழைந்த்தும், தன் தோப்பியை கழற்றி Stand-டை நோக்கி வீசுவது வாடிக்கை.


இதுவரை வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் 007 திரைப்படங்கள் :


டாக்டர் நோ (1962)


ஃப்ரம் ருஷ்யா வித் லவ் (1963)


கோல்டுஃபிங்கர் (1964)


தண்டர்பால் (1965)


யூ ஒன்லி லைவ் ட்வைஸ் (1967)


ஆன் ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரட் சர்வீஸ் (1969)


டயமண்ட்ஸ் ஆர் ஃபாரெவெர் (1971)


லைவ் அண்ட் லெட் டை (1973)


தி மேன் வித் தி கோல்டன் கன் (1974)


தி ஸ்பை ஹூ லவ்ட் மீ (1977)


மூன்ரேக்கர் (1979)


ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி (1981)


ஆக்டோபுஸ்ஸி (1983)


எ வ்யூ டூ கில் (1985)


தி லிவிங் டேலைட்ஸ் (1987)


லைசென்ஸ் டூ கில் (1989)


கோல்டன் ஐ (1995)


டுமாரோ நெவர் டைஸ் (1997)


தி வேர்டு இஸ் நாட் எனஃப் (1999)


டை அனதர் டே (2002)


கேசினோ ராயல் (2006)


குவாண்டம் ஆஃப் சோலஸ் (2008)
Font size

அடுத்து வர இருப்பது

பாண்ட் 23 (2011)

Friday, February 13, 2009

Shahrukh Khan House Attacked......






Two unidentified persons allegedly threw kerosene bottles at actor Shahrukh Khan's bungalow 'Mannat' in suburban Bandra in the wee hours on Friday.

"Around 0230 hours, motorcycle-borne miscreants threw the bottles filled with kerosene and fled from the scene. The security men at the residence 'Mannat' chased the miscreants but in vain," said Deputy Commissioner of Police (DCP) Niket Kaushik.

When the incident occurred, Khan was not in the house and nobody has sustained any injuries, he said adding that a complaint has been registered and further investigation is on in the matter.

சிவா மனசில சக்தி - திரை விமர்சனம்


சிவா மனசில சக்தி



ஆணுக்கும்,பெண்ணிற்கும் இடையே நடக்கும் ஈகோவை வைத்து அன்பேவா, தில்லானா மோகனாம்பாள், குஷி, திருடா திருடி என்று பல படஙகள் வந்திருந்தாலும், இந்த கருவை வைத்து இண்ட்ரஸ்டாக திரைக்கதை அமைத்தால் நிச்சயமாய் வெற்றியடையும். அதே நேரம் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பினாலும் ஆங்காங்கே இழுவையாய் போகும் வாய்ப்பும் உண்டு. அந்த வகையில் சிவா மனசுல சக்தி இரண்டாம் வகை.

ரெயிலில் நடக்கும் முதல் சந்திப்பிலேயே சிவாவுக்கு காதல் வந்துவிடுகிறது. பரஸ்பரம் இருவரும் மாற்றி மாற்றி தங்களை பற்றி பொய் சொல்ல, அது தெரியும் போது, தாஙகள் ஏமாற்றபட்டதால் காண்டாகி போய் ஒருவரை ஒருவர் மாட்டிவிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த இருவரின் ஈகோவும் உடைந்து தங்கள் காதலை சொன்னார்களா இல்லையா? அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா..? என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள்.



ஜீவாவுக்கு ஏற்ற வேடம்.. மிக இயல்பாய் நடித்திருக்கிறார். படம் நெடுகிலும் அவரும், சந்தானமும், சில சமயம் கிச்சு,கிச்சும், சில சமயம் நம்மை மறந்து சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் ஒவ்வொரு முறை சந்தானம் புது செல் வாங்கும் போதும், அதை ஜீவா உடைப்பதும் சூப்பர்.. அதில் உச்சம் சந்தானம் புதுசு, புதுசாய் செல் வாங்கி வந்து காட்டினால் அதை வாங்கி சக்தியிடம் பேசி விட்டு கோபத்தில் உடைக்கிறான் என்று லேண்ட்லைன் போன் வைத்திருந்தால் அதையும் மப்பாகி அதன் மேல் விழுந்து உடைக்கும் இடம் சூப்பர்.

கதாநாயகி அனுயா.. வேறு நல்ல முகமே கிடைக்கவில்லையா.. எப்ப பார்த்தாலும் விளக்கெணணைய் குடித்தார் போலிருக்கிறது அவரது முகம். பல இடங்களில் ரியாக்‌ஷன்கள் எல்லாமே ஒரே மாதிரியாய் இருக்கிறது. இவரால் பல இடங்களில் படம் இழுவையாகிறது.

இம்மாதிரியான கதைகளுக்கு ஒரு அழகான, இளமையான, பார்க்கும் நமக்கே லவ் செய்யலாமாங்கிற ஒரு தோற்றம் வேண்டும் அது மிஸ்ஸிங்.. பாவம் அவர் ஒவ்வொரு வார்த்தையையும், ப்ராம்ட் வாங்கி பேசுவது நன்றாய் தெரிகிறது.

ஜீவாவின் அம்மாவாய் ஊர்வசி.. இவரை காமெடியாய் யூஸ் செய்ய வேண்டும் என்று பல இடங்களில் அவரை ஒரு லூசு போல காட்டியிருப்பது கொஞ்சம் ஓவர். அதே போல் அனுயாவின் அப்பா ஞானசம்பந்தம் கேரக்டரும், அவர் சீரியஸ் அப்பாவா, அல்லது சும்மா வந்திட்டு போற அப்பாவான்னு தெரியல.. அதிலும் க்ளைமாக்ஸில் ஜீவா அவருடய பெண்ணை “மேட்டர்” பண்ணிவிட்டதாய் அவரிடமே சொல்ல.. அதை ஊர்வசியும், ஞானசம்பந்தமும், அதை பற்றி புரியாமல் பேச, அனுயா எந்தவிதமான உணர்வுகளும் இல்லாமல், ஜீவாவை பற்றி பேசுவது காமெடி என்கிற அபத்த கூத்து.

அதே போல் ஜீவா, அனுயா வேலை செய்யும் ஆபீசில் போய் குடித்துவிட்டு நட்ட நடு ஆபீஸில் சட்டையில்லாமல் போய் பிரச்சனை பண்ண, அங்கே வரும் போலீஸ் அவனிடம் என்ன காதல் பிரச்சனையா..? என்று கேட்டுவிட்டு செலவுக்கு காசு கொடுத்துவிட்டு போவது இன்னொரு காமெடி என்கிற அபத்த கூத்து.

சத்யன், அனுயாவின் அண்ணன், இவரும் தன் பங்குக்கு ஆங்காங்கே வந்து நம்மை சிரிக்க வைக்க முயற்சி பண்ணுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். அனுயாவும், ஜீவாவும் சந்திக்க வைப்பதற்காகவே ஏற்பட்ட கேரக்டர்.

அனுயா, ஜீவாவிடம் தன் காதலை டாஸ்மாக் பாரில் வ்ந்து சொல்வது புதிது. ஆனால் அந்த காட்சிக்கு சுற்றுபுறத்தில் உள்ள மற்ற குடிகாரர்கள் எந்த விதமான ரியாக்‌ஷனும் கொடுக்காமல் இருப்பது ஆச்சர்யம். மற்ற குடிகாரர்களை வைத்து இன்னும் அருமையாய் செய்திருக்கலாம் இயக்குனர். அதுமட்டுமில்லாமல் கதை இங்கயே முடிந்துவிட்டது. அதற்கு அப்புறம், கோயில், கல்யாணம், கல்யாணத்துக்கு முன் செக்ஸ், மறுபடியும், சண்டை, க்ளைமாக்ஸ் என்று இழுத்திருக்கிறார்கள்.

சக்தி சரவணனின் ஓளிப்பதிவு ஒகே. ஒரு சில காட்சிகளில் பேக்ரவுண்ட் ப்ளீச் அடிக்கிறது. முக்கியமாய் ஜீவா, அனுயாவை தேடி தாய் ஏர்வேஸுக்கு வந்து பேசும் காட்சி, பல காட்சிகள் ஹேண்ட் ஹெல்டில் எடுக்கபட்டிருக்கிறது. அதனால் நிறைய காட்சிகள் நீளமாய், கொஞ்சம் ட்ராமா போல் இருக்கிறது. ஒரே சமயத்தில் ப்ரேமில் நான்கு பேர் தொடர்ந்து நின்றபடி, ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டபடி மாற்றி, மாற்றி பேசுவது, ஓவர்லாப்பில் டயலாக் போய்விடுகிறது.

யுவனின் இசையில்.. ஒரு கல், ஒரு கண்ணாடி சூப்பர்.. மற்ற பாடல்க்ளை பற்றி பெரிசாய் சொல்ல ஏதுமில்லை. டைட்டிலில் வரும் ஆரம்ப பிண்ண்னி இசை துள்ளல்.. ஏனென்றால் அது அவங்க அப்பா மணிரத்னம் படத்துக்கு அடிச்ச பிரபல ரீரிக்காட்டிங்.. பின்னால் அதே டியூனில் அவர் பாட்டு வேறு போட்டிருக்கிறார். பிண்ணனி இசையும் ஒகே.


இயக்குனர் ராஜேஷ், மிகவும் நம்பியிருப்பது டயலாக்குளை என்று தெரிகிறது, பல இடங்களில், இயல்பான நகைச்சுவை நம்மை கட்டி போடுகிறது. சில இடங்களில் ரொம்ப பேசறாங்கப்பா..ன்னு தோணுது. முதல் பாதி ரொம்பவே நீளம். இதோ..இதோ என்று இடைவேளையை எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள்.

கொஞ்சம் கேரக்டரைசேஷனிலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால்..??? நிறைய விஷயஙக்ள் பெரிசாய் ஒட்டவில்லை, முக்கியமாய் அந்த பர்த்டே சீன், எவ்வளவோ அருமையாய் வந்திருக்க வேண்டிய சீன் அதை மிஸ் பண்ணிவிட்டீர்கள், அதே போல் அந்த டாஸ்மாகில் காதலை சொல்லும் சீன் அதிலும் நிறைய ஸ்கோர் பண்ண வாய்பிருந்தும் ..?? ஒரு வேளை படம் கலகலவென போனால் போதும் என்று இருந்துவிட்டாரோ..?

அதே போல் பஸ்ஸில் ஜீவா பேசியதை அனுயா காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கேட்காமல் போய்விட்டார் என்பதை அவர் ஹெட்போனை காதிலிருந்து கழட்டி காண்பிக்கும் போதே தெரிந்துவிடுகிறது. பின் எதற்கு மொத்த சீனையும் ப்ளாக் & வொயிட்டில் ரீவைண்ட் ஷாட்ஸ்? அந்த நிமிடத்தில் ஜீவாவின் மேல் கிடைக்க வேண்டிய சிம்பதி இந்த காட்சிகளினால் விரையமாகிறது.

படம் காமெடி படமா, காதல் படமா என்ற குழப்பத்தினால், பல இடங்களில் லாஜிக் மீறின சீரியல் டிராமா காட்சிகளால், இம்மாதிரியான படங்களின் அந்த காதலர்களை பார்க்கும் போது படம் பார்பவர்களின் மனநிலை,அவர்கள் எப்படியாவது சேரவேண்டும், இரண்டு பேரில் யாராவது விட்டு கொடுங்களேன் என்று நம் மனது பதைக்கும், இந்த நடுவாந்திர திரைக்கதை அமைப்பினால் ஒரு அழகான காதல் கதையை மிஸ் செய்துவிட்டார்கள். எதிர்பார்பில்லாமல் போனால் ஜஸ்ட் ரசிக்கலாம்..

ஏர்-ஷோவில் அஜீத்!

ஏர்-ஷோவில் அஜீத்!



பெங்களூர் எலஹங்கா விமானப்படை மைதானத்தில் நடக்கும் ஏரோ இந்தியா சர்வதேச விமாணக் கண்காட்சியான 'ஏர் ஷோ-2009', விமானங்களுடன் சேர்த்து 'நட்சத்திரங்களின்' வருகையால் மிகக் கலர்புல்லாக காட்சியளிக்கிறது.
அங்கு சாகஸங்களை நிகழ்ச்சி வரும் சர்வதேச போர் விமானங்கள், காட்சி அரங்குகளிலும் வைக்கப்பட்டுள்ள விமானங்கள், ரேடார்கள், ஏவுகணைகளைக் காண முன்னணி திரை/ விளையாட்டு நட்சத்திரங்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினி மற்றும் ஒருவயது மகள் அனோஷ்காவுடன் ஏர்ஷோவை கண்டுகளித்தார். காதுவரை நீண்ட மீசை, கறுப்பு கோட் சூட்டில் அசத்தலாக வந்த அஜீத், சும்மா ஓரிடத்தில் நின்று வேடிக்கைப் பார்க்கவில்லை.
கையோடு கொண்டு வந்திருந்த கேமிராவுடன் கைப்படக்காரர்களுடன் ஒருவராக களத்தில் குதித்து விமானங்களை 'சுட்டுத் தள்ளினார்'.
நிருபர்கள் அடையாளம் கண்டுகொண்டுவிட்டு அவரை படமெடுக்க ஆரம்பித்தனர். அட, நாம எப்பவும் கிடைப்போமே.. இந்த ஷாட்ஸ் கிடைக்குமா என்று தனக்கு மேலே பறந்த சுகோய்-30எம்கேஐ விமானத்தை ஆர்வமாகப் படம்பிடித்துக் கொண்டிருந்தார் அஜீத்.

தல போல வருமா ??

Sunday, February 1, 2009

இப்போதைக்கு முருகதாஸ் !! பின்னர் யாரோ ?

வெளிநாடுகளிலும் சோபிக்காத 'வில்லு'


வெளிநாடுகளிலும் சோபிக்காத 'வில்லு'
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கலுக்கு வெளியான விஜய் நடித்த 'வில்லு' படம், தமிழ்நாட்டில் பிளாப் ஆகி மண்ணைக் கவ்வியது.

விஜய்யின் முந்தைய படங்களான 'அழகிய தமிழ் மகன்', 'குருவி'யை விட இது மோசமான தோல்வி என்கின்றன, திரையரங்குகளில் இருந்து வரும் செய்திகள்.

இங்கு தான் நிலைமை இப்படி என்றால், வெளிநாடுகளும் 'வில்லு'க்கு வரவேற்பு இல்லையாம். இங்கிலாந்தில் 'வில்லு' ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் 'குருவி' படத்தைவிட 'வில்லு' கலெ‌க்சன் மோசமாக இருக்கிறதாம்.

இங்கிலாந்தில் இதுவரை 27.27 லட்சங்களை மட்டுமே 'வில்லு' வசூல் செய்துள்ளது. 'குருவி' ஒரு கோடிக்கும் மேல் வசூலித்தது. அதனை 'வில்லு' முறியடிக்கும் வாய்ப்பு குறைவாகவே தென்படுகிறது